Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் 16வதுவார்டு கிழக்குபகுதி குமாரசாமி நகரில், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் திருப்பூர் எம்எல்ஏ க.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
தெற்கு மாநகர செயலாளர் டிகேடி மு.நாகராஜ், வடக்கு மாநகர செயலாளர் ந.தினேஷ்குமார், மாநகர துணை செயலாளர் சிட்டிகணேசன், மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, எம்.எஸ்.ஆர். ராஜ், டிஜிட்டல் சேகர், வெ.ஜோதி, மகேந்திரன், VVG.காந்தி, வார்டு செயலாளர் சா.மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சி.ஆறுமுகம் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கி பகுதி மக்களுக்கு இலவச கொரானா பரிசோதனையும் செய்யப்பட்டது. உடன் சில்வர் சரவணன், புஷ்பரத்தினம், வைரவேல், வடிவேல் உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொள்ள டாக்டர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடபட்டது..